2021-05-10 19:51:14
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் ஆக்ஸிஜன் படுக்கை எண்ணிக்கை வெறும் 7. காலியாக இருக்கும் தீவிர சிகிச்சை படுக்கை 1. அதுவும் தனியார் மருத்துவமனையில்.
தினமும் Corona பரவும் நபர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவர்களில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது?
Chennai Trade center போல மேலும் பல இடங்களை ஆக்ஸிஜன் வசதிகளுடன் போர்க்கால அடிப்படையில் தயார் செய்ய தமிழக அரசை அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் பல ICU படுக்கைகள் தயார் செய்து, சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை புதிதாக பணியமர்த்த கேட்டுக் கொள்கிறோம்.
மக்களாகிய நாம் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டை விட்டு வெளியேறாமல் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
118 views16:51