Get Mystery Box with random crypto!

Corona நோய் தொற்றுக்கு எதிரான பணியில் மக்களுக்கு தடுப்பூசி போட | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

Corona நோய் தொற்றுக்கு எதிரான பணியில் மக்களுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது. விரைவாகவும் அதிகமாகவும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகள் இன்று Corona நோய் தொற்றில் இருந்து கிட்டதட்ட மீண்டுவிட்டன என்றே சொல்லலாம். ஆனால் இந்தியாவில் தடுப்பூசியை கையாளும் விதம் மிகவும் மெத்தனப்போக்குடன் செயல்படுத்தப்படுகிறது.

உதாரணமாக தமிழகத்திற்கு 5.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் 2 லட்சம், 3 லட்சம் என்று மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் தடுப்பூசிகள் வந்துகொண்டு இருக்கின்றன. மத்திய அரசு தடுப்பூசி அனுப்புவதில் மாநிலங்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த விரிவான வெளிப்படையான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. எத்தனை தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது மற்றும் எத்தனை தடுப்பூசிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது போன்ற விவரங்களை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிரபார்க்கிறோம்.

Corona நோய் தொற்று பரவாமல் தடுக்க நாம் அனைவரும் ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவோம்.