ஊழல் அரசியல்வாதிகள் எவ்வளவு முயற்சித்தாலும் அரசு அதிகாரிகள் ஒப்புதல் இல்லை என்றால் அவர்களால் ஊழல் செய்ய முடியாது. ஆகவே ஊழல் அதிகாரிகள் எந்த ஆட்சி மாறினாலும் தண்டிக்கப்படுவதே இல்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடித்து ஆட்சியாளர்கள் ஊழல் செய்ய உதவுகிறார்கள்.
இந்த நிலை மாறுமா? கடந்த ஆட்சியில் ஊழலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடக்குமா? அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா?
ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் பட்டியலை கொடுக்க அறப்போர் ரெடி. நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ரெடியா?