Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 85

2021-05-24 17:43:06 தகவல் உரிமை சட்டத்தை அறப்போர் இயக்கம் பயன்படுத்தியது எப்படி? நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்.

140 views14:43
ओपन / कमेंट
2021-05-24 08:53:16
சமூக வலைத்தளங்கள் மூலம் அறப்போர் இயக்கத்தை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள். முகநூலில் உங்கள் நண்பர்களை அறப்போர் பக்கத்திற்கு https://www.facebook.com/Arappor அழையுங்கள். தமிழகம் முழுவதும் அறப்போர் இயக்கத்துடன் இணைந்து ஊழலுக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக பணி செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு https://arappor.org/volunteer.php இந்த இணைப்பை அனுப்பி பதிவு செய்ய அழையுங்கள்.
91 views05:53
ओपन / कमेंट
2021-05-22 14:16:37
Register Now - https://arappor.org/volunteer.php
உங்க ஊரில் அரசாங்க பணிகளில் ஊழல் நடக்கிறதா? அதை எப்படி தடுக்கலாம்?
அறப்போர் இயக்கத்துடன் இணைந்து ஊழலை தடுக்க நீங்க ரெடியா?
189 views11:16
ओपन / कमेंट
2021-05-21 17:19:41 அறப்போர் இயக்கம் கொரோனா நடவடிக்கைகள் குறித்த கீழ்கண்ட மனுவை சுகாதார செயலாளருக்கு இன்று அனுப்பியுள்ளோம். அதில் முக்கியமான ஆறு கோரிக்கைகளை சுகாதார துறைக்கு வலியுறுத்தி உள்ளோம்.
1. முதலாவதாக, கொரோனா இறப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளோம். சென்னையின் முக்கிய மருத்துவமனைகளின் சவக்கிடங்குகள் முன் நிற்கும் மக்கள் கூட்டம், மற்றும் அமரர் ஊர்தி பதிவு செய்ய நிற்கும் நீண்ட வரிசைகள் அரசு இறப்புகளை பெருமளவில் மறைக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
அதுமட்டும் இல்லாமல் கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் விவரங்களையும் துறை வாரியாக வெளியிட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விடுபடாமல் சரியான நிவாரண உதவிகளை பெற முடியும்.
2. கடந்த சில மாதங்களாக இறப்பு சன்றிதழ்கள் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இறப்பு சான்றிதழ் போன்ற அத்தியாவசிய சேவையை அரசு எந்த காரணமும் சொல்லாமல் தடையின்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் வேகமாக பரவுவதால் உடனடியாக அதற்கான அத்தனை மருந்துகளையும் அரசு வாங்கி தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க வேண்டும். ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்காக உபயோகிக்கப்படும் Liposomal Amphoterin B என்ற மருந்து பெருமளவில் தட்டுப்பாட்டில் உள்ளதால், இதனை உடனடியாக போதிய அளவில் TNMSC கொள்முதல் செய்ய வேண்டும்.
4. tncovidbeds.tnega.org என்ற இணையதளத்தில் எப்படி பிற படுக்கை தொடர்பான விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளதோ அதேபோல்
Ventilators தொடர்பான விவரங்களையும் இணைக்க வேண்டும். குறிப்பாக இன்னும் எத்தனை ventilators order செய்யப்பட்டு உள்ளது அது எப்போது எந்தெந்த தேதிகளில் சப்ளை செய்யப்படும் என்ற விவரங்களையும் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
5. மாவட்ட வரியான oxygen war room அமைக்க வேண்டும். Emergency oxygen fetching units zone வாரியாக நிறுவப்பட வேண்டும். Tanker tracking system, மொபைல் units, nasal oxygen அதிகமாக்காப்பட வேண்டும். செங்கல்பட்டு, நெல்லை மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைகளில் நடந்த அவல சம்பவங்கள் சுகாதாரத்துறை சரியாக oxygen பற்றாக்குறையை எதிர்நோக்க திட்டமிடவில்லை என்று தெளிவாக தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் மேலும் ஏற்படாமல் இருக்க மாவட்ட வாரியான oxygen war room அமைத்து துரிதமாக செயல்பட வேண்டும்.
6. தனியார் மருத்துவமனைகளில் Bills மற்றும் discharge சுருக்கம் கொடுக்காமல் மக்களை ஏமாற்றுவது இப்போது சாதாரணமாகிவிட்டது. அதிக கட்டணம் வசூலிப்பதால் பல மருத்துவமனைகள் Bills கொடுப்பது இல்லை. பொதுவான ICMR மற்றும் முன்பே நடைமுறையில் இருந்த Clinical Establishment வழிமுறைகளையும் இப்போது பல தனியார் மருத்துவமனைகள் கடைபிடிப்பதில்லை. இது தொடர்பாக மக்கள் புகார் அளிக்க தனி தொடர்பு எண்களை சுகாதார துறை வெளியிட வேண்டும். புகார்களை உடனுக்குடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
184 views14:19
ओपन / कमेंट
2021-05-21 17:19:35
169 views14:19
ओपन / कमेंट
2021-05-21 10:44:57 2020ம் வருடம் ஜனவரி மாதத்தில் ரேஷன் துறையில் நடைபெற்ற செட்டிங் டெண்டர் மூலம் எவ்வாறு தமிழக அரசுக்கு 1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டது. இந்த டெண்டர் சுதா தேவி ஐஏஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோரால் அனுமதிக்கப்பட்டு Christy நிறுவனத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்பட்டது.

இது போன்ற மேலும் பல செட்டிங் டெண்டர்கள் அரங்கேற காரணமான சுதா தேவி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். இந்த செட்டிங்கில் ஈடுபட்ட Christ நிறுவனங்கள் இனி டெண்டரில் பங்கேறக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.


251 views07:44
ओपन / कमेंट
2021-05-20 10:47:07 அரசுக்கு 100 கோடி வரை இழப்பு ஏற்படுத்திய துவரம் பருப்பு டெண்டர் ரத்து - அறப்போர் புகார் மீது தமிழக அரசு நடவடிக்கை.
கடந்த அதிமுக ஆட்சியில் சுதா தேவி IAS துணையுடன் கிலோ 100 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் துவரம் பருப்பை ரேஷன் கடைகளுக்கு கிலோ 143 ரூபாய்க்கு Christy நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்க செட்டிங் செய்யப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
இந்த டெண்டர் செட்டிங் வேலையில் ஈடுபட்ட சுதா தேவி IAS தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற பல செட்டிங் டெண்டர்கள் மூலம் தமிழக அரசுக்கு கடந்த 4 வருடங்களாக பல கோடி இழப்பு ஏற்படுத்தி வரும் Christy நிறுவனங்கள் இனி அரசு பணிகளில் டெண்டர் கோருவதில் இருந்து Blacklist செய்யப்பட வேண்டும். இந்த செட்டிங் டெண்டர்கள் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தெரிந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விசாரிக்கப்பட வேண்டும். இதை செய்தால் மட்டுமே இனி வரும் அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்த பயப்படுவார்கள்.
362 views07:47
ओपन / कमेंट
2021-05-20 10:47:04
333 views07:47
ओपन / कमेंट
2021-05-18 15:45:20 Corona நிவாரண பொருட்கள் கொடுக்கும் திட்டத்திற்கு விடப்பட்ட டெண்டரில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நேற்று அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று காலை அந்த டெண்டர் விதிகளில் மாற்றங்கள் செய்து அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. இனி விடப்படும் மற்ற அனைத்து டெண்டர்களிலும் இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படுமானால் ரேஷன் துறையில் அனைத்து டெண்டர்களையும் Christy நிறுவனம் மட்டுமே எடுக்கும் நிலை மாற அதிக வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் குறிப்பிட்ட இந்த Corona நிவாரண பொருட்கள் டெண்டர் கிட்டதட்ட 670 கோடி மதிப்புள்ளது. குறைந்தபட்சம் 20% பொருட்கள் சப்ளை செய்யக்கூடிய நிறுவனம் என்றாலே அவர்கள் 134 கோடிக்கு பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும். இத்தனை பெரிய தொகைக்கு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. மேலும் இந்த டெண்டர் விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20 மே என்பதால் இருக்கும் நேரமும் குறைவு. ஆகவே மீண்டும் Christy நிறுவனங்கள் தான் இந்த டெண்டரை எடுக்கும் நிலை வரும். அப்படி நடந்தால் இன்று டெண்டரில் செய்த மாற்றங்கள் எதுவும் எந்த நல்ல பயனையும் தராது. அமுதம் அங்காடியில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு Christy நிறுவனம் டெண்டர் எடுப்பதை தடுக்க முடியாது. மேலும் பொருட்களின் மாதிரியை நேரில் வந்து கொடுக்க வேண்டும் என்ற விதி Christy நிறுவனத்திற்கு சாதகமாக உணவுத்துறையில் செயல்படும் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு டெண்டர் கொடுக்கும் மற்ற நிறுவனங்களை தடுக்க உதவும். E Tender கொடுப்பதன் பயனும் நிறைவேறாது.

ஆகவே இந்த டெண்டர்களை மாவட்டவாரியாக பிரித்து மாவட்டத்திற்கு 5 நிறுவனங்களுக்கு தர வேண்டும். அப்படி செய்வதன் மூலம் 190 சிறு நிறுவனங்கள் தமிழகத்தில் பயன் பெறும். டெண்டர் விண்ணப்பிக்கும் நேரத்தையும் மேலும் 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிட வேண்டும். இதை செய்வதன் மூலம் இது வரை தமிழக ரேஷன் துறையில் டெண்டர்களை செட்டிங் செய்து அனைத்து டெண்டர்களையும் சந்தை விலையை விட அதிக விலைக்கு எடுத்து தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுத்தி வந்த மாபியாக்களுக்கு முடிவு கட்ட முடியும். இது குறித்து அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
169 views12:45
ओपन / कमेंट
2021-05-18 15:45:16
160 views12:45
ओपन / कमेंट