2020ம் வருடம் ஜனவரி மாதத்தில் ரேஷன் துறையில் நடைபெற்ற செட்டிங் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
2020ம் வருடம் ஜனவரி மாதத்தில் ரேஷன் துறையில் நடைபெற்ற செட்டிங் டெண்டர் மூலம் எவ்வாறு தமிழக அரசுக்கு 1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டது. இந்த டெண்டர் சுதா தேவி ஐஏஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோரால் அனுமதிக்கப்பட்டு Christy நிறுவனத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்பட்டது.
இது போன்ற மேலும் பல செட்டிங் டெண்டர்கள் அரங்கேற காரணமான சுதா தேவி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். இந்த செட்டிங்கில் ஈடுபட்ட Christ நிறுவனங்கள் இனி டெண்டரில் பங்கேறக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.