Get Mystery Box with random crypto!

அரசுக்கு 100 கோடி வரை இழப்பு ஏற்படுத்திய துவரம் பருப்பு டெண்டர | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

அரசுக்கு 100 கோடி வரை இழப்பு ஏற்படுத்திய துவரம் பருப்பு டெண்டர் ரத்து - அறப்போர் புகார் மீது தமிழக அரசு நடவடிக்கை.
கடந்த அதிமுக ஆட்சியில் சுதா தேவி IAS துணையுடன் கிலோ 100 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் துவரம் பருப்பை ரேஷன் கடைகளுக்கு கிலோ 143 ரூபாய்க்கு Christy நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்க செட்டிங் செய்யப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
இந்த டெண்டர் செட்டிங் வேலையில் ஈடுபட்ட சுதா தேவி IAS தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற பல செட்டிங் டெண்டர்கள் மூலம் தமிழக அரசுக்கு கடந்த 4 வருடங்களாக பல கோடி இழப்பு ஏற்படுத்தி வரும் Christy நிறுவனங்கள் இனி அரசு பணிகளில் டெண்டர் கோருவதில் இருந்து Blacklist செய்யப்பட வேண்டும். இந்த செட்டிங் டெண்டர்கள் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தெரிந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விசாரிக்கப்பட வேண்டும். இதை செய்தால் மட்டுமே இனி வரும் அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்த பயப்படுவார்கள்.