2021-06-02 09:42:49
தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு விற்பனை செய்ய Christy நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. அவர்கள் விற்பனை செய்ய இருக்கும் விலை: ரூ. 85 / கிலோ
இதே துவரம்பருப்பு டெண்டர் போட்டியே இல்லாமல் Christy நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய போது அவர்கள் டெண்டரில் கொடுத்த விலை: ரூ. 146.50 / கிலோ.
20000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு டெண்டரில் ஆரோக்கியமான வெளிப்படையான போட்டியை உருவாக்கியதன் மூலம் தமிழக மக்களின் 120 கோடி வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வேறு யாரும் டெண்டர் எடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் Chrsity நிறுவனம் போட்டியில் மிகக்குறைந்த விலைக்கு டெண்டர் கொடுத்துள்ளது. தன்னை Blacklist செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தனக்கு நஷ்டமே வந்தாலும் பரவாயில்லை என்று இந்த வேலையை செய்துள்ளது.
மக்கள் பணத்தை காப்பாற்றிய மகிழ்ச்சி இருந்தாலும், கடந்த ஆட்சியில் டெண்டர் செட்டிங் செய்து அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்திய Christy நிறுவனங்கள் Blacklist செய்யப்படவில்லை என்பது ஒரு கரும்புள்ளியாக தொடர்கிறது.
இனி அடுத்தடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியை ஊக்குவித்து சந்தை விலையை விட குறைவான விலைக்கு ரேஷன் பொருட்களை வாங்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் டெண்டர் செட்டிங் செய்ய துணை போனவர்கள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
அரசாங்கம் மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம். அறப்போர் தொடரும்..!
190 views06:42