ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் டெண்டர்களில் பங்கேற்பதில் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் டெண்டர்களில் பங்கேற்பதில் இருந்து அனைத்து Christy நிறுவனங்களும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
கடந்த 5 வருடங்களாக, போட்டிக்கு எந்த நிறுவனங்களையும் டெண்டர் விட முடியாத அளவிற்கு, முன்னாள் ரேஷன் துறை செயலாளர் சுதா தேவி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கொண்டு, அனைத்து டெண்டர்களையும் மிக அதிக விலைக்கு செட்டிங் செய்து, தமிழ்நாடு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்திய, Christy நிறுவனங்களின் குட்டு ரத்து செய்து மீண்டும் விடப்பட்ட துவரம் பருப்பு டெண்டர் மூலம் தற்பொழுது வெளிப்பட்டு விட்டது.
அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்திய Chirsty நிறுவனங்களை மீண்டும் டெண்டர்களில் பங்கேற்க அனுமதிப்பது அவர்கள் இது வரை செய்த செட்டிங் ஊழல்கள் அனைத்தையும் அங்கீகரிக்கும் செய்யலாகவே பார்க்கப்படும் என்பதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் சொல்லிக் கொள்கிறது.