2021-06-17 08:26:19
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா எவ்வாறெல்லாம் அதிகாரவர்கத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்பதை மிகவும் விளக்கமாக 5 பகுதிகளாக wire எழுதியுள்ளது.
https://thewire.in/.../justice-arun-mishra-judgments...
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்சநீதிமன்ற நீதிபதியை விமரசித்தார் என்று தானாகவே முன்வந்து ஒரு அவமதிப்பு வழக்கை தொடுத்து கடைசியில் பிரஷாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபாராதம் செலுத்த தீர்ப்பு அளித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டும் தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமை பொறுப்பில் பதவி வகிக்க வேண்டும் என்ற விதிமுறையை 2019ம் வருடம் பிஜேபி ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இந்த பதவியை வகிக்கலாம் என்று மாற்றியமைத்ததன் விளைவு தான் இந்த நியமனம்.
இனி இந்தியாவில் மனித உரிமைகளுக்கு எதிராக முறையிட இருந்த கடைசி இடமும் பறிபோய் விட்டது. மனித உரிமைகளுக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்.
208 views05:26