தமிழக கிராமங்கள் அனைத்திலும் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தி தரும் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத்நெட் திட்டம், அறப்போர் கொடுத்த புகாரை அடுத்து ரத்து செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கான டெண்டரில் விதிகளை மீறி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக பல மாற்றங்கள் செய்யப்பட காரணமாக இருந்தவர் தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இவர் தொடர்ந்து செட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவாரா என்று தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படு கேட்டுக்கொள்கிறோம்.
பாரத்நெட் டெண்டர் செட்டிங் குறித்து விளக்கமாக அறிந்து கொள்ள
இந்த காணொளி பாருங்கள்.
ரத்து செய்யப்பட்ட டெண்டர் மீண்டும் விடப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த டெண்டரிலும் சில முறைகேடுகள் இருப்பதாக ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.