2023-04-17 11:02:42
ஏப்ரல்.17:
இன்று
தீரன் சின்னமலை பிறந்த நாள்! சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் இன்று (ஏப்.17) கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன் சின்னமலை.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி.
தந்தை: இரத்னசாமி கவுண்டர், தாய்: பெரியாத்தா
பிறப்பு: ஏப்ரல்17, 1756
இறப்பு: 31 ஜூலை 1805 (அகவை 49)
தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.
ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர்.
சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 17-ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது
5.8K viewsTNPSC THAMIZH, edited 08:02