2024-02-29 10:19:18
பிப்ரவரி-29
அரிய நோய்கள் தினம்!(Rare diseases day)
மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஏனென்றால், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பிப்ரவரி 29-ந்தேதி வருவதால் அரிய நோய் தினத்துக்கு இந்நாள் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28-ந்தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரிய வகை நோய்கள் என்று எப்படி சொல்வது?
இது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. அமெரிக்க அரியநோய் சட்ட விதிப்படி 1,500 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஜப்பானில் 2 ஆயிரத்து 500 பேரில் ஒருவரும், ஜரோப்பாவில் 2 ஆயிரம் பேரில் ஒருவரும் பாதிக்கப்பட்டு இருந்தால், அது அரிய நோய் என்று கருதப்படுகிறது.
12.7K viewsஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, edited 07:19