Get Mystery Box with random crypto!

The Seithikathir®

टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir® T
टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir®
चैनल का पता: @seithikathir
श्रेणियाँ: अवर्गीकृत
भाषा: हिंदी
ग्राहकों: 15.12K
चैनल से विवरण

WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 6

2023-06-10 07:26:39 நாகூர் கந்தூரி சிறப்பு ரயில்

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

21-06-23 காலை 8.15 மணிக்கு தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம்,
சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வழியாக காரைக்காலுக்கு பகல் நேர சிறப்பு ரயில் இயக்குகிறது.

22-6-23 வியாழன் காலை 6:00 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டு மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம் வழியாக மதியம் 1:30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
1.2K viewsThe Seithikathir, edited  04:26
ओपन / कमेंट
2023-06-10 06:20:36
1.5K viewsDeva Nathan, 03:20
ओपन / कमेंट
2023-06-10 06:20:28 கொலம்பியாவில் விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்.

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது; அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர்.

இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார்.

இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது.

எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

ஆனால், சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுபற்றி கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறும்போது, இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் என கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1.5K viewsDeva Nathan, 03:20
ओपन / कमेंट
2023-06-10 05:21:46 பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்.

அரை இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை 6 - 3, 5 - 7, 6 -1, 6 - 1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
1.6K viewsDeva Nathan, 02:21
ओपन / कमेंट
2023-06-10 04:43:24 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.

நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.
1.7K viewsDeva Nathan, 01:43
ओपन / कमेंट
2023-06-09 20:35:25
2.1K viewsThe Seithikathir, 17:35
ओपन / कमेंट
2023-06-09 20:35:21 விழுப்புரத்தில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவி.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் வந்த யுவஸ்ரீ  என்ற மாணவி செமஸ்டர் தேர்வு எழுதினார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ.
23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.

மாணவிக்கு (ஜூன் 9) இன்று காலை திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு ( ஜூன் 9 )  நடைபெற்றது.
இதனை யுவஸ்ரீ எழுத முடிவு செய்தார்.

அதன்படி, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர், மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று, தேர்வு எழுதினார்.
2.1K viewsThe Seithikathir, 17:35
ओपन / कमेंट
2023-06-09 20:32:53 எச்சரிக்கை..!

அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் வசூக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
 
கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், விளம்பர பலகைகள், பேனர்கள் விவகாரத்தில் மீண்டும் கட்டுப்பாடு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள் வைத்தால் நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. உரிமக் காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

விபத்து நடந்தால், விளம்பர பலகை, பேனர் வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், உயிரிழப்போ, காயமங்களோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்கள், நிறுவனங்கள், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளர்களே தர வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
2.0K viewsThe Seithikathir, 17:32
ओपन / कमेंट
2023-05-25 05:13:14 ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.
269 viewsDeva Nathan, 02:13
ओपन / कमेंट
2023-05-24 19:32:23 காவல் உதவி ஆய்வாளர் பணி - பட்டப்படிப்பு முடித்தால் போதும்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Sub Inspector பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

பதவி - Sub Inspector

காலியிடங்கள் - 621

கல்வித் தகுதி - பட்டப்படிப்பு

வயது வரம்பு -20-30

சம்பளம் - ரூ.36,900 முதல் ரூ.1,16,600
பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்

தேர்வு முறை - எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - அறிவிப்பை பார்க்கவும்

கடைசி தேதி - ஜூன் 30, 2023

இணையதள முகவரி - https://www.tnusrb.tn.gov.in/

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
1.5K viewsThe Seithikathir, 16:32
ओपन / कमेंट