2022-03-01 12:24:39
சிட்லபாக்கம் ஏரியை மீட்க கோரி அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கின் மூலம் இந்த மாற்றம் நடந்துள்ளது. இனி பத்திரப்பதிவு செய்பவர்கள் தங்கள் நிலம் நீர்நிலை இல்லை என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும். நிலம் வாங்குவதற்கு முன்பு மக்கள் இனி அந்த நிலத்தின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
சரி மக்கள் உறுதிமொழி கொடுக்கிறார்கள். அதில் அரசு அதிகாரிகள் உதவியுடன் பொய்யான உறுதிமொழி கொடுத்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களை யார் கண்டுபிடிப்பது? அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது?
அறப்போர் இயக்கம் வெளியிட்ட பள்ளிக்கரணை சதுப்புநில பத்திரப்பதிவு மோசடியே
இதற்கு சரியான சாட்சி. ஒரு சதுப்பு நிலத்தை பத்திரப்பதிவு அதிகாரிகள் பல தில்லுமுல்லு வேலைகள் செய்து பிளாட் போட்டு விற்று இருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் இன்று உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இந்த மோசடி குறித்த விசாரணையும் இல்லை. அவர்களுக்கு தண்டனையும் இல்லை.
இது போன்று நடக்காமல் இருக்க அரசாங்கம் என்ன செய்ய போகிறது?
https://www.thehindu.com/news/national/tamil-nadu/registrants-to-give-undertaking-on-waterbodies/article65090149.ece
376 views09:24