2022-05-05 07:30:24
ஒரு கிராமத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய வாக்காளர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை பூர்த்தி செய்ய அரசாங்கம் கிராமசபை நடக்க இருக்கும் நாளுக்கு 7 தினங்களுக்கு முன்பு இருந்தே மக்களிடம் கிராம சபை நடக்கும் தேதி இடம் நேரம் போன்றவற்றை பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 7 நாட்கள் பிரச்சாரம் செய்யப்படாத காரணத்தால் பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் குறைந்தபட்ச எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்வதில்லை. அடுத்து வரும் கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் ஊரில் நடந்த கிராம சபை குறித்த மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க https://bit.ly/GramaSabaiArapporSurvey இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். கிராமசபை கூட்டங்களில் பங்கேற்ற உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
250 views04:30