2022-05-24 12:28:00
பொதுத்தமிழ் - இலக்கியம்
நந்திக்கலம்பகம்
நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.
கலம் + பகம் = கலம்பகம். கலம்-பன்னிரண்டு, பகம்-ஆறு. பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர்.
இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப் பெறவில்லை.
பதினெட்டு உறுப்புகள் :
புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்.
சிறந்த தொடர் :
'மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே"
இப்பாடல், நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறுவதால் பாடாண் திணையாகும்.
3.3K views09:28