2021-08-15 05:42:03
வருத்தமான செய்தி:
அறப்போர் இயக்க ஆதரவாளர்கள் உதவியால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட Gajalakshmi Corona தொற்று ஏற்பட்டு மாற்று சிறுநீரகமும் செயலிழந்து 10 நாட்களுக்கு மேலாக கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவர் இதற்கு முன்பு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்த போது இவருடன் சேர்த்து மேலும் பலருக்கு அங்கே முறையாக பராமரிக்கப்படாத உபகரணங்கள் மூலம் தொற்று ஏற்பட்டு இனி சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களுக்காக அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையின் தவறுகளை நிரூபித்து அனைவருக்கும் இடைக்கால நிவாரண நிதி வாங்கி கொடுத்தது.
மேலும் அவர்கள் தனியார் மருத்துவமனையில் தொற்று நீங்க சிகிச்சை பெறவும், அதன் பிறகு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளவும் உங்கள் ஆதரவுடன் உதவி செய்தது.
சிகிச்சை மேற்கொண்ட மற்றவர்கள் அனைவரும் நலமாக இருக்க Gajalakshmi சிறுநீரகம் மீண்டும் செயலிழந்து போனதால் அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு corona தொற்றும் ஏற்பட சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவை நாம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அரசாங்கத்தின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரை காப்பாற்ற நாம் எடுத்த முயற்சி தோல்வியால் முடிந்திருந்தாலும் நாம் கடைசி வரை அவர்களை கைவிடவில்லை. நம்பிக்கையுடன் முயற்சி செய்தோம்.
கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் அவரது சிகிச்சைக்காக ஒரு சிறிய செலவை ஏற்றுக் கொண்டு உதவுங்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிருங்கள்.
இனி ஒருவருக்கு கூட அரசாங்கத்தின் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட விட கூடாது என்று உறுதி ஏற்போம்.
https://www.impactguru.com/fundraiser/help-mrs-gajalakshmi-apl?upl=1
395 views02:42