அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விவரம், காலியாக இருக்கும் படுக்கைகள் எண்ணிக்கை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்துகள் பற்றிய அனைத்து தகவல்களும் உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டடு மக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் மென்பொருளை 4 மாதங்களில் உருவாக்க டெண்டர் கொடுக்கப்பட்ட நிலையில், மிகவும் தாமதமாக கொடுக்கப்பட்ட அதன் மாதிரியை ஆய்வு செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மென்பொருளில் பல குறைகள் இருப்பதாகவும், இது சுத்த வேஸ்ட் என்றும் நிராகரிக்கிறார்கள். அதையடுத்து அந்த டெண்டர் ரத்தும் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகும் அன்றைய சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் இந்த டெண்டர் காலத்தை நீட்டிக்கும் படி கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்கிறார். இதையடுத்து மீண்டும் அனுமதி கொடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 4 வருடங்கள் கடந்தும், 5.5 கோடி பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும் இந்த மென்பொருள் தயாராகவில்லை.
இது குறித்து பீலா ராஜேஷ் அவர்கள் பதில் அளிப்பாரா? இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா?