Get Mystery Box with random crypto!

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்கக்கேணி ஏரிய | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்கக்கேணி ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல்நிலையம் கட்டப்பட்டதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

1. நீதிமன்ற உத்தரவு வரும் வரை காவல்நிலையத்தை பயன்பாட்டிற்கு திறக்க கூடாது.
2. காவல்நிலைய கட்டுமான பணிக்கு இனி பணம் செலவு செய்ய கூடாது.
3. இந்த காவல்நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டது உறுதியானால் இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்.
4. காவல்நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய சென்னை IIT குழு அமைக்க வேண்டும். அந்த குழு அறிக்கையில் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளது உறுதியானால் இந்த கட்டிடத்தை இடித்து மீண்டும் அந்த நீர்நிலையை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

#Arappor #Thamaraikeni #Policestation