இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,45,147 நபர்களுக்கு corona நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிர நோய் தொற்று ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறுகின்றன. அரசாங்கம் இந்த நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்த நோய் பரவுவதை தடுக்க நாமும் உதவலாம்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இதன் மூலம் பல உயிரிழப்புகளை தடுக்க முடியும். தீவிர தொற்று ஏற்படுவதை குறைக்க முடியும். தடுப்பூசி தொடர்பான விஷம வதந்திகளை நம்பாமல் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனி மனித இடைவெளியை பின்பற்றுங்கள்.
இந்த நோய் தொற்று பரவலை அரசாங்கம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. மக்களாகிய நாமும் கட்டுப்பாடுடன் இருந்தால் தான் இந்த நோயை விரட்ட முடியும்.
#Corona நோய்க்கு எதிரான அறப்போர் செய்யும் நேரமிது !