Get Mystery Box with random crypto!

வச்ச குறி தப்பாது... தன்னம்பிக்கை நாயகி ஷீத்தல் தேவி. உலக பார | The Seithikathir®

வச்ச குறி தப்பாது... தன்னம்பிக்கை நாயகி ஷீத்தல் தேவி.

உலக பாரா வில்வித்தை பைனலுக்கு முன்னேறிய இரு கைகள் இல்லாத முதல் வீராங்கனை என வரலாறு படைத்தார் இந்தியாவின் ஷீத்தல் தேவி.

செக் குடியரசில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.

பெண்களுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தென் கொரியாவின் சோய் நா மியை சந்தித்தார். இருகைகளும் இல்லாத ஷீத்தல் தேவி, 137-136 என வெற்றி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சரிதா, பாராலிம்பிக் சாம்பியன், சீனாவின் ஜோவ் ஜியாமினை சந்தித்தார்.

இதில் சரிதா 139-127 என வெற்றி பெற்றார். பின் நடந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, சரிதா மோதினர்.

முதல் செட்டில் ஷீத்தல் தேவி 26-27 என பின் தங்கினார்.

இரண்டாவது செட்டில் (29-27) முந்தினார் ஷீத்தல் தேவி. 3, 4வது செட்டில் இருவரும் 27-27, 27-27 என சமநிலை வகித்தனர்.

ஐந்தாவது செட்டில் ஷீத்தல் தேவி 28-25 என ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் ஷீத்தல் தேவி 137-133 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.

இரு கைகளும் இல்லாமல் உலக பாரா வில்வித்தை பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என வரலாறு படைத்தார் ஷீத்தல்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir