Get Mystery Box with random crypto!

ஒருபுறம் தமிழக அரசு அடையாறு வெள்ளத்தை தடுக்க தனியார் நிலங்களை | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ஒருபுறம் தமிழக அரசு அடையாறு வெள்ளத்தை தடுக்க தனியார் நிலங்களை கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கி ஆற்றின் அகலத்தை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் CMDA Master planல் நீர்நிலை என்று குறிக்கப்பட்டுள்ள 6 ஏக்கர் அடையாறு பகுதியை தனியாருக்கு நில பயன்பாட்டு மாற்றம் செய்து கொடுக்க Housing secretary Hitesh Kumar CMDAவுக்கு அழுத்தம் கொடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே நில மாற்றம் செய்ய கொடுக்கப்பட்ட விண்ணப்பம் அறப்போர் புகாரை அடுத்து CMDAவால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் நில மாற்றம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. CMDA மற்றும் Housing secretary இந்த பிரச்சனையில் வெளிப்படையான அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுக்கின்றது. நீர்நிலை தனியாருக்கு கொடுக்கப்படும் பட்சத்தில் இந்த பிரச்சனையை அறப்போர் இயக்கம் சட்டப்படி சந்திக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.