டெண்டர்களில் செட்டிங் செய்து தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு அரசாங்க பணிகளை கொடுத்து அதில் கமிஷன் வாங்கி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட E டெண்டரையும் முடக்கி F டெண்டராக மாற்றி வைத்துள்ளார்கள். அடுத்த அரசாங்கம் அமைந்த பிறகு தமிழகத்தின் எந்த பகுதியில் டெண்டர்கள் கொடுக்கப்பட்டாலும் அதை அறப்போர் கண்காணிக்கும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு தமிழக மக்களாகிய உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அறப்போர் குழுவை அமைப்போம். அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிப்போம். நமது வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுப்போம். இதற்காக அறப்போர் இயக்கத்தில் இணைந்து செயல்பட நீங்கள் தயார் என்றால் உங்கள் விவரங்களை உடனடியாக இங்கு https://arappor.org/volunteer.php பதிவு செய்யுங்கள்.
அறப்போர் இயக்கத்தின் செயல்பாடுகளை நிதி உதவி அளித்து ஆதரிக்க arappor.org/donate