Get Mystery Box with random crypto!

🪙BITCOIN TRADING COMPANY ( DILIP)

टेलीग्राम चैनल का लोगो nathiyora_nanalgal — 🪙BITCOIN TRADING COMPANY ( DILIP) B
टेलीग्राम चैनल का लोगो nathiyora_nanalgal — 🪙BITCOIN TRADING COMPANY ( DILIP)
चैनल का पता: @nathiyora_nanalgal
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 648
चैनल से विवरण

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
பொன் மொழிகள்
தன்னம்பிக்கை பதிவுகள்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
வரலாற்றுப் பதிவுகள்
ஆன்மீகம்
விழிப்புணர்வு
பதிவுகள்
⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 20

2022-05-19 02:47:58
140 viewsRajalingam, 23:47
ओपन / कमेंट
2022-05-19 02:46:42

மனிதர்கள் பலவிதம்

அலம்பல்கள்
அமைதியானவர்கள்

மூடர்கள்
அறிவாளிகள்

சுயநலவாதிகள்
வள்ளல்கள்

பொறாமை பிடித்தவர்கள்
மனதாரப் பாராட்டுபவர்கள்

மோசடிக்காரர்கள்
நேர்மையானவர்கள்

ஆராய்ந்தால்
அத்தனையும்_ நம்மைச் சுற்றிதான்

இத்தனையும் தாண்டி ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு நமக்கு இல்லாவிட்டால் அது மதிப்பற்று போய்விடும்
நாம் தோல்வியாளர் வரிசையில் இருப்போம்

இனிய காலை வணக்கம்

186 viewsRajalingam, 23:46
ओपन / कमेंट
2022-05-17 08:45:40
311 viewsPrakash.G. Kannan, 05:45
ओपन / कमेंट
2022-05-17 08:45:39 * தகவல் களஞ்சியம் *


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*


*வீட்டை அலங்கரிக்க சிம்பிள் டிப்ஸ்:*



'வீட்டை கட்டிப்பார் கல்யாணம் செய்து பார்" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.


வீடு கட்டுவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்பதால் தான் இதை சொல்லியுள்ளனர். அப்படியே கஷ்டப்பட்டு வீட்டை கட்டி முடித்தாலும் அதை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இல்லையென்றால் கஷ்டப்பட்டு வீட்டை கட்டியதற்கு அர்த்தமே இல்லாமல் போகும்.

வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும்.

வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும், கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலே போதும் வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம்.

வீட்டில் கிடைக்கும் பொருட்களை வீசி எறிவதற்குப் பதிலாக பயனுள்ள மற்றும் அலங்காரப் பொருட்களாக உருவாக்குவதே சிறந்த பயன்பாடாகும். இப்போது வீட்டின் அழகை மேம்படுத்துவதற்கான சில முக்கியமான டிப்ஸ்களை பற்றி பார்ப்போம்.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினால், நிறைய இட வசதிகள் கிடைக்கும். பணம் செலவாகாமல் வீடு அழகாக தெரிய வேண்டுமென்றால், இந்த மாற்றத்தை கொண்டு வரவும்.

சமையலறை என்பது வீட்டிலுள்ள ஒரு முக்கிய அறை. சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், நவீனமாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்கு பழைய சாதனங்கள் மற்றும் உபயோகம் இல்லாமல் இருக்கும் சாதனங்களை தூக்கிப் போடவும்.

வீட்டைச் சுற்றி இயற்கையான சூழலை உருவாக்க சிறிது நேரத்தை செலவிடுங்கள். அது வீட்டின் அழகை மென்மேலும் அதிகரிக்கும். அதாவது வீட்டை சுற்றி உள்ள இடங்களில் பூந்தோட்டங்களை உருவாக்கலாம்.

வீட்டில் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் கூட மனதை நிறைவு செய்யும். ஆகையால் தனித்திறமையை உபயோகித்து குளியலறை கண்ணாடிகளை சுற்றி உள்ள விளிம்புகளில் வர்ணங்களை பூசி அழகுப்படுத்தலாம்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதனால் வீட்டை அலங்கரிக்கும் போது பொதுவாக அலங்கரிப்பதே நல்லது. சுவரொட்டி என்பது தனிப்பட்ட ரசனையை சார்ந்ததாகும். அனைவருக்கும் அது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் வீட்டில் இருக்கும் சுவரொட்டிகளை நீக்கி பொதுவான நிறங்களில் வர்ணங்களை பூசவும்.

வெற்று கண்ணாடி பாட்டில்களை தூக்கி எறியாமல் வீட்டின் எளிய அலங்காரங்களுக்கு அவற்றை மீண்டும் பயன்படுத்தவும். அதாவது, பழைய பாட்டிலைத் துணியை பயன்படுத்தி ஓர் அழகான பேனா (pen) ஹோல்டராக மாற்றுவது, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வைத்துச் சுவரை அலங்கரிப்பது, காகித மலர்களில் செய்யப்படும் சுவர் அலங்காரம் போன்றவற்றை செய்து வீட்டை அலங்கரிக்கலாம்.

வீட்டில் உள்ள அசிங்கமான அல்லது தேய்ந்துப்போன கதவுகளை காட்டிலும் ஒருவரை எரிச்சல் பட வைக்க வேறு ஒன்றும் தேவையில்லை. அதனால் கதவுகளுக்கு நன்றாக வர்ணம் பூசுங்கள். அதுவே வீட்டின் முதல் ஈர்ப்பாக அமையும்.

வீட்டின் வரவேற்பரையில் பாரம்பரியம் மிக்க கலை பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களை வைத்தால் பார்க்க நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*
283 viewsPrakash.G. Kannan, 05:45
ओपन / कमेंट
2022-05-17 08:45:02
136 viewsPrakash.G. Kannan, 05:45
ओपन / कमेंट
2022-05-17 08:45:01 * தகவல் களஞ்சியம் *


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*


*ஏசி போட்டாலும் உங்க ரூம் சீக்கிரமா கூல் ஆகலயா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…*


நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது..


அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.. இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்ச்சியாக இருக்க, கண்டிப்பாக ஏசி என்பது அன்றாட தேவையாகிவிட்டது.. வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், ஏசியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணங்கள் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன, இது நிச்சயமாக பெரும்பாலான மக்களுக்கு ஒரு கவலைக்குரிய காரணியாகும்.


பெரும்பாலான ஏசிகள் சிறந்த வெப்பநிலை அமைப்பு மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, இதன் விளைவாக மின் கட்டணங்கள் உயரும்.

உங்கள் ஏசி வேகமாக வேலை செய்ய உங்கள் அறையை மூடி வைக்க வேண்டும். எனவே, ஏசியை ஆன் செய்யும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஏதேனும் கதவு திறந்திருந்தால், உங்கள் ஏசி, குளிரூட்டலுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுக்கும்..

ஏசி வேகமாக குளிர்விக்க, நீங்கள் வழக்கமான இடைவெளியில் பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, உங்கள் ஏசி குளிர்ச்சியடையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனடியாக ஏசி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் ஏசி அதிக மின்சாரத்தை உட்கொள்ளும்.

ஏசி மற்றும் சீலிங் ஃபேன் ஒன்றாகப் பயன்படுத்தினால் அறையை மிக வேகமாக குளிர்விக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் மின்விசிறியை இயக்குவது, அறை முழுவதும் அனல் காற்றை வீசுவதை இது ஏசியின் குளிர்ந்த காற்றை எதிர்க்கும். எனவே, சிறிது நேரம் ஏசியைப் பயன்படுத்திய பின் அறை குளிர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மின்விசிறியை இயக்கலாம், ஆனால் குறைந்த வேகத்தில். இது அறை முழுவதும் குளிர்ந்த காற்றைப் பரப்ப உதவும்.

உங்கள் ஏசி வேகமாக குளிர்ச்சியடைய, குளியலறை அல்லது சமையலறையில் ஏதேனும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அவற்றை அணைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அறையின் வெப்ப அளவைக் குறைத்து ஏசியை சிறப்பாகச் செயல்படச் செய்யும்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*
135 viewsPrakash.G. Kannan, 05:45
ओपन / कमेंट
2022-05-17 08:43:21
102 viewsPrakash.G. Kannan, 05:43
ओपन / कमेंट
2022-05-17 08:43:20 * ஆனந்த யாழ் *

*பல்சுவைக் கதம்பம்.*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*


*அடடே! எதிரிகளை இப்படி கூட ஏமாற்றலாமா? என்ன ஒரு புத்திசாலியான பறவை.*


நெசவாளர் பறவைகள் பிளாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இந்த பறவைகள் கட்டும் கூடுகளால் மற்ற பறவைகளில் இருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது.


இந்த பறவைகள் புற்கள், நாணல்கள் மற்றும் பிற தாவரங்களால் சிக்கலான கூடுகளை உருவாக்குகின்றது. இந்த பறவைகள் கூடு கட்டும்போது அதில் ஒரு பொய்யான வழியையும், உண்மையான வழியையும் செய்யும். இதன் மூலமாக பாம்புகள் மற்றும் மற்ற உயிரினங்களிடமிருந்து தங்களுடைய கூடு மற்றும் முட்டைகளை பாதுகாத்துக் கொள்கிறது.


அதாவது பொய்யான வழியில் பாம்புகள் நுழையும்போது அவற்றால் கூட்டுக்குள் செல்ல முடியாது. ஏனெனில் பறவைகள் உண்மையான வழியை மற்றவர்களுக்கு தெரியாத அளவிற்கு மூடி வைத்து விடும். இந்தப் பறவைகளின் கூடுகள் உருண்டை மற்றும் கூம்பு வடிவில் இருக்கும். இந்த நெசவாளர் பறவைகள் நிறம், வடிவம் போன்றவற்றில் வேறுபட்டு பல்வேறு விதமாக காணப்படுகிறது. இந்த நெசவாளர் இனத்தைச் சேர்ந்த பறவைகளை ஆராய்ச்சியாளர்கள் ரெட் பில்ட் கியூலியா அதாவது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான காட்டுப் பறவைகள் என அழைக்கின்றனர்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
102 viewsPrakash.G. Kannan, 05:43
ओपन / कमेंट
2022-05-17 08:42:42
92 viewsPrakash.G. Kannan, 05:42
ओपन / कमेंट
2022-05-17 08:42:41 * ஆனந்த யாழ் *

*பல்சுவைக் கதம்பம்.*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*


*பார்த்தாலே பரவசம். பாலைவனத்தில் பூத்த மஞ்சள் ரோஜா..!*


த. வளவன்

மன்னராட்சி மாய்ந்துவிட்டது. மகுடங்கள் சாய்ந்து விட்டன. மக்களாட்சி வீறுகொண்டு நடக்கிறது என்கிற கால கட்டம் இது.


ஆனாலும், கற்சுவர்களால் கைகோர்த்து, கோட்டை என்று பெயர் பெற்று, மன்னர்களையும் அவர்தம் வம்சாவளிகளையும், மக்களையும் காத்து இன்றளவும் அழியாமல் தலைநிமிர்ந்து நிற்கின்ற கோட்டைகள், இந்த பாரத தேசம் முழுவதும் ஆங்காங்கே நிலை கொண்டு, மன்னராட்சியை நினைவூட்டுகின்றன. அப்படி உயிர்ப்போடு இருக்கும் கோட்டையை கண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் கோட்டைக்கு ஒருமுறை போய் வாருங்கள். அந்த கோட்டைக்குள் இன்றளவும் மக்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

தார் பாலைவனத்தின் மத்தியில், திரிகுடா குன்றின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போல், தரையிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில், விஸ்வரூப தரிசனம் தருகிறது ஜெய்சால்மர் கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் தங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரிலேயே, இந்த கோட்டையின் சரித்திரத்தை மையமாக வைத்து தான் எழுதிய நாவலை படமாக்கியிருக்கிறார் சத்யஜித் ரே.

ஜெய்சால்மர் கோட்டையை 1156ல், பகதி ராஜபுத்திர வம்சத்தை சார்ந்த அரசர் ஜெய்சால் என்பவர் கட்டியிருக்கிறார். இதை கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனதாம். போர்க்காலங்களில் பகைவர்களின் தாக்குதலை சமாளிக்கும்படி 3 பாதுகாப்பு சுவர்களை கொண்டிருக்கிறது இந்த காவல் கோட்டை.

கோட்டையின் உட்பகுதி. இங்கே ஒரு இந்தியனின் சராசரி வாழ்க்கை அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரி, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், உல்லாச நடைபோடும் வெளிநாட்டுப் பயணிகள், அவர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் பிரெஞ்சு, இத்தாலிய உணவகங்கள், விரையும் வாகனங்கள், பால் கேன்களை தூக்கிசெல்லும் பால் விற்பவர்கள் என மன்னர்கள் காலத்தில் இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்று வரை இடம் பெயராமல் வாழ்கிறார்கள். மக்கள் தொகை அதிகமானதால், கோட்டையின் வெளியே உள்ள இடங்களை சுற்றிலும் குடியேறி இருக்கிறார்கள்.

பச்சை பசேல் என பரந்திருக்கும் தோட்டங்கள். அதன் நடுவே அழகிய பூக்களை தாங்கி நிற்கும் செடிகள். பின்னணியில், மனதை சுண்டி இழுக்கும் 'ராஜ்மஹால்' அரண்மனை! அரண்மனையின் ஏழு மாடி கட்டிடம் அருங்காட்சியமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மகாராணிகளின் விலை உயர்ந்த ஆடைகள், போர்க்கால ஆயுதங்கள், சமைக்க உபயோகப்படுத்திய பாத்திரங்கள் என்று வகைப்படுத்தி, இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அரண்மனையின் கதவுகள், ஜன்னல்கள், முற்றங்கள், ஓவியங்கள் என அழகு மிளிரும் அத்தனையும். மாடிப்படிகளில் ஏறிவந்த தேக அசதியை விரட்டி விடுகின்றன. ஒவ்வொரு மாடியிலிருக்கும் ஜன்னல்கள் வழியாக ஜெய்சால்மர் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.

ஜெய்சால்மர் கோட்டையின் உள்ளே 15, 16 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஏழு சமணக் கோயில்கள் உள்ளன. இவை தவிர, இங்கிருக்கும் இந்துக்களின் கோவிலான லஷ்மிநாத் புகழ்பெற்றது. 1494 ல் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் லஷ்மி விக்கிரகத்தின் பேரழகு, பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஜெய்சால்மரில் அளவில்லா செல்வங்களை வியாபாரத்தின் மூலம் ஈட்டி, வியாபாரிகள் கட்டிய வீடுகளை ஹவேலிகள் என்று அழைக்கிறார்கள். மிக நேர்த்தியான, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடி இந்த கட்டிடங்களின் வயது பல நூறு ஆண்டுகள், எண்ணற்ற அறைகள், அலங்கார வளைவுகள், எழில் கொஞ்சும் கதவுகள், ஜன்னல்கள் என சுற்றி சுழலும் நம் கண்கள், படைத்தவனுக்கு பரவசமாய் நன்றி சொல்வது நிச்சயம். இந்த வீடுகளில் சில, அருங்காட்சியமாக ஆக்கப்பட்டுள்ளன. பலவற்றில், அதன் உரிமையாளர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில்.. வியாஸ் ஹவேலி, ஸ்ரீநாத் பேலஸ் போன்றவை நாம் கட்டாயம் பார்க்க வேண்டியவை.

வெயில் மயங்கும் மாலை நேரம். கோட்டையிலிருந்து வெளிவந்து திரும்பி பார்க்கையில் பாலைவனத்தில் பூத்த மஞ்சள் ரோஜாவாக ஜெய்சால்மரின் அழகு மனதில் நிறையும்.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​*
92 viewsPrakash.G. Kannan, 05:42
ओपन / कमेंट