சாகித்ய விருது அறிவிப்பு: Our telegram group for job notification pdf https://t.me/Blnt_05 சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார். தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதை தொகுப்புக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருத்தாளர்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது. Attend today https://instagram.com/stories/tamilanbharathi_jobs/2913282567467534137?igshid=MDJmNzVkMjY= 778 views03:19