கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் சாட்டியதோடு நின்றுவிடாமல், அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் டெண்டர்களை ரத்து செய்து, இனி சந்தை விலைக்கு மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும் 2013 முதல் இந்த செட்டிங் டெண்டர் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் இதற்கு துணை போன அரசு ஊழியர்கள் அனைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#அனில்_பாவம்