2022-05-20 07:51:38
TNPSC
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக"
GROUP -II தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 1) தேர்விற்கு முந்தைய நாள் (20.05.2022) இரவு எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
2) தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ஏழு மணி நேர உறக்கம் என்பது மிக அவசியம்.
3) தேர்வு நாள் அன்று (21.05.2022) காலை அளவோடு சாப்பிடவும் அல்லது பழங்கள் சாப்பிடவும்
(கண்டிப்பாக எதாவது சாப்பிட்டுவிட்டு செல்லவும்) 4) தேர்வு அறைக்கு செல்லும் முன் அல்லது தேர்விற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தண்ணீர் பருகுவதை தவிர்க்கவும்.
சாக்லேட் அல்லது எதாவது சிறிய இனிப்பு ஒன்றை சாப்பிட்டு விட்டு செல்லவும்.
(மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உங்களை உடல் ரீதியாக தயார்படுத்த தெரிவிக்கப்பட்டது)
தேர்வு என்பது வெறும் பேனாவால் எழுதுவது மட்டும் அன்று.உடல் மற்றும் மனது இரண்டையும் ஒருமுகப்படுத்தி எழுதக் கூடிய ஒன்று. தேர்விற்கு ஏற்கனவே பயன்படுத்தி பார்த்த இரண்டு கருப்பு பந்து முனை பேனாவினை கொண்டு செல்லவும்.
நுழைவுச் சீட்டில் ( Hall Ticket) உள்ள நான்கு பக்கங்களையும் நகல் எடுத்துக் கொள்ளவும். ( இரண்டு நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஜெராக்ஸ் போதும், கலர் ஜெராக்ஸ் தேவையில்லை)
தேர்விற்கு முந்தைய நாள் முடிந்தால் தேர்வு மையத்தை ஒரு முறை சென்று பார்த்து உறுதி படுத்திக் கொள்ளவும். இல்லை எனில் காலை 7.30 மணிக்குள் தேர்வு மையம் சென்று தேர்வு மையத்தை உறுதிப்படுத்தவும். (ஒரு பெயரில் இரண்டு மூன்று கல்வி நிறுவனம் இருக்கலாம் அதற்காகவே இந்த வழிமுறையானது தெரிவிக்கப்படுகிறது)
கடைசி நேரத்தில் தொலைதூர பயணங்களை தவிர்க்கவும்.
கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
ஆதார் அட்டை
பாஸ்போர்ட்
ஓட்டுநர் உரிமம்
பான் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
கட்டாயமாக முகக் கவசம் (Mask ) அணிந்து செல்ல வேண்டும்தேர்வு மையம் வீட்டின் அருகில் இருந்தால் கூட 8.00 மணிக்கு சென்று விடவும்.
தேர்வு மையத்திற்கு வாகனத்தில் செல்பவர்கள் மித வேகத்தில் செல்லவும். (வேகமாக பயணிக்க வேண்டாம்)
சளி, தும்மல் ஆகியவற்றை ஏற்படுத்தும் குளிர்பானங்களை பருக வேண்டாம். (தண்ணீர் கொதிக்க வைத்து குடிக்கவும்)
தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் சுமூகமான முறையில் நடந்து கொள்ளவும்.
OMR sheet -ல் உங்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களையும் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் கேட்டு தெளிவு பெற்ற பின் நிரப்பவும்.
தேர்வு 12.30- க்கு முடிந்த பின் நிரப்ப வேண்டிய தகவல்களை பொறுமையாக நிரப்பவும் தவறாக நிரப்பினால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்.
அனைத்து வினாக்களுக்கும் கண்டிப்பாக விடை அளிக்கவும். இல்லையெனில் அதற்கும் மதிப்பெண்களை இழக்க நேரிடும். மொழிப்பாடங்களை எழுதி முடித்ததும் கட்டாயம் கணிதம் தொடர்பான வினாவிற்கு விடையளிக்க முயற்சிக்கவும். கடைசி நேரத்தில் விடையளிக்க முயற்சி செய்து அது ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தும். தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் கேள்வியின் போது இருக்கும் ஆர்வம் கடைசி கேள்வியை எழுதும் வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு வினாவும் மிக முக்கியம்.......வினா மற்றும் Option ஆகியவற்றை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது படித்து தெளிவு பெற்ற பின்பு விடையளிக்கவும்.
இத்தேர்வில் கிடைக்கும் வெற்றி உங்களை மட்டுமல்ல உங்களுடைய தலைமுறையையே மாற்றக் கூடியது.
எனவே கவனமாக நிதனாமாக தேர்வினை எழுதி அரசு அதிகாரியாக
IMPULSE Coaching Institute - ன் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
3.7K views04:51