Get Mystery Box with random crypto!

பரந்தூர் விமான நிலையம் வரும் இடத்தில் நடந்த மோசடி பத்திரப்பதிவ | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

பரந்தூர் விமான நிலையம் வரும் இடத்தில் நடந்த மோசடி பத்திரப்பதிவு தொடர்பாக சார் பதிவாளர் ராஜதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும், கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் மீது விசாரணை துவங்கி விட்டதாகவும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று இரவு அறிக்கை அளித்துள்ளார்.

ராஜதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது வேறு ஒரு மோசடி வழக்கில். சீனிவாசன் மீது விசாரணை நடக்கிறது என்று PACL மோசடியை அறப்போர் வெளியிட்ட நாள் முதல் சொல்லி வருகிறார்களே தவிர அந்த விசாரணை நடப்பதாகவும் தெரியவில்லை, முடிவதாகவும் தெரியவில்லை, அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. வழக்கம் போல உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் தான் தமிழக அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. சீனிவாசனை காப்பாற்றுவது யார்?

#Arappor | #Parandur | #RegistrationScam | #JothiNirmalasamyIAS | #KVSrinivasan