ஒரு சில நேர்மையான IAS அதிகாரிகள் தவிர பெரும்பாலான IAS அதிகாரிகள் ஊழல் செய்ய யோசனை கொடுப்பவர்களாகவும், ஊழலுக்கு அனுமதி கொடுப்பவர்களாகவும், ஊழல் அரசியல்வாதிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஊழல் செய்து கொள்ளை அடிக்க இந்த ஊழல் அதிகாரிகள் துணை தேவைப்படுவதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இவர்களின் அதிகாரம் பறிக்கப்படுவதில்லை. இவர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய்வதில்லை. இவர்களில் யாரும் சிறைக்கு செல்வதும் இல்லை.
மக்களாகிய நாம் இந்த ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தெருவில் இறங்கி குரல் கொடுக்க ஆரம்பித்தால் மட்டுமே இவர்களது ஊழல் கொட்டத்தை அடக்க முடியும். அறப்போர் இயக்கத்துடன் இணைந்து கேள்விகளை கேட்க June 19 காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்.