தகவல் ஆணையர் பிரதாப் அவர்களே, உங்கள் வேலை மேல் முறையீடு வழக்குகளை விரைவாக விசாரித்து தகவல்களை மக்களுக்கு பெற்றுத்தருவதும், அந்த தகவலை குறித்த நேரத்தில் தர தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதும் தான். அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் தகவல் கேட்பவர்கள் பற்றியும், தகவல் கேட்பவர்களின் நோக்கம் பற்றியும் ஆராய்ச்சி செய்வது அவசியமற்றது. அது உங்கள் வேலை கிடையாது.
மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்காத தகவல் ஆணையர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டதிருத்தம் மேற்கொண்டால் மட்டுமே இவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணியை ஒழுங்காக செய்வார்கள். தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.