Get Mystery Box with random crypto!

அறப்போர் ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக வெள | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

அறப்போர் ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக வெளியிட்டு வரும் அனைத்து ஊழல்களிலும் அந்த ஊழல்களை செய்த அரசியல்வாதிகளையும் மற்றும் அவர்களுக்கு துணை போன உயர் அதிகாரிகளையும் அம்பலப்படுத்தி வருகிறோம்.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியிலும் தற்பொழுது திமுக ஆட்சியிலும் ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளை விசாரிக்க கூட ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து உயர் பதவிகளை வழங்கி வருகிறார்கள்.
ஊழலை ஒழிப்போம் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொல்லும் எந்த அரசியல் கட்சியும் இந்த ஊழல் அதிகாரிகளை பற்றி பேசுவதில்லை.

ஆனால் ஊழலுக்கு கையெழுத்து போட்டு அனுமதி கொடுக்கும் இந்த அரசு உயர் அதிகாரிகளை தண்டிக்காமல் ஊழலை குறைப்பது ஒழிப்பது சாத்தியமே இல்லாத விஷயம்.

ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு துணை போகும் உயர் அதிகாரிகளை மக்களாகிய நாம் தான் கேள்வி கேட்க வேண்டும். அந்த உயர் அதிகாரிகள் செய்த ஊழலை மேடை போட்டு பட்டி தொட்டி எல்லாம் பேச வேண்டும். அவர்கள் மீது FIR பதிந்து விசாரணை நடத்தி தண்டிக்க அரசுக்கு திரளாக திரண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதற்காக ஜூன் 19 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று கூடுவோம். அரசுக்கு கேட்கும் வண்ணம் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுப்போம். ஊழல் உயர் அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவோம்.