Get Mystery Box with random crypto!

ஒரு பக்கம் மக்கள் Corona தொற்று காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ஒரு பக்கம் மக்கள் Corona தொற்று காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டு இருக்கும் போது மறுபுறம் மக்களை கூட்டமாக கூடுவதற்கு அனுமதித்து தொற்றின் வேகத்தை அதிகப்படுத்தும் அலட்சியப்போக்கு நிலவி வருகிறது.
சமீபத்தில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழா என்ற காரணத்தை சொல்லி நூற்றுக்கணக்கான மக்கள் மாஸ்க் இல்லாமல், தனி மனித இடைவெளி இல்லாமல் ஒன்று கூடியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இந்த நிகழ்வை தடுக்க தவறியது மிகப்பெரிய தவறு. இந்த தவறினால் தொற்று பரவல் அதிகமாவதை தடுக்க அந்த விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நோய் தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் மேலும் நோயை பரப்பாமல் தடுக்க வேண்டும்.
மாவட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பணியை துவக்கி பல உயிர்களை காப்பாற்றுவார்களா?