இன்றைய கூட்டுப் பிரார்த்தனை ஔவையார் வரிகளுக்கு நன்றி செலுத்துவோம் (அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடின்றி பிறத்தல் அரிது) நிமிர்ந்து உட்காரும் ஆற்றலை கொடுத்த இறைவனுக்கு நன்றி எப்போதும் நிமிர்ந்த நடையாய் நடக்கும் ஆற்றலை கொடுத்த இறைவனுக்கு நன்றி பார்க்கும் திறனை கொடுத்த இறைவனுக்கு நன்றி பொருட்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் தெரிவதற்கு நன்றி கண்களில் ஒளியாற்றல் மேலோங்கி இருப்பதற்கு நன்றி சிறப்பாக கேட்கும் திறனை பெற்றிருக்கும் செவிகளுக்கு நன்றி பிரபஞ்சத்தின் ஒலியை மிகத் துல்லியமாக கேட்பதற்கு நன்றி உடம்பில் அனைத்து சக்தி ஓட்ட பாதைகளையும் பலப்படுத்திய இறைவனுக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 713 views21:30