Get Mystery Box with random crypto!

கண்ணேறு வாராது பிணியொன்று சேராது கவலைப்படாது நெஞ்சம் க | பாம்பன் சுவாமிகள்

கண்ணேறு வாராது பிணியொன்று சேராது
கவலைப்படாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலி என்ற பேய் அடாது
விண்ணேறு ம் அணுகாது கன்மவினை தொடராது
விஷமச்சுரம் வராது
வெய்யபூ தம்பில்லி வஞ்சனைகள் தொடரா
விஷம்பரவு செத்தும் அடராக்
எண்ணேறு செனனங்கள் கிடையாது காலபயம்
எள்ளளவுமே இராது இவ்
வேளைக்கு இரங்கியரு தெய்வம் உனை அல்லாமல்
இன்னம் ஒரு தெய்வம் உண்டோ
தண்ணேறு கங்கைமலை மங்கையரு டங்கமே
சரசகோபாலன் மருகா
சதுமறைகளே தந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.