மூலிகை பூரி செய்யலாம் வாங்க..ஒரு கைப்பிடி அளவு தூதுவளை, முள் முருங்கை, ஆடாதோடை இலை, முருங்கைக்கீரை இவைகளை விழுதாக அரைக்கவும்.
இதனுடன் ஒரு கப் வரகரிசி மாவு, ஒரு கப் பச்சரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
பிறகு உப்பு, மிளகுதூள், சுக்குத்தூள் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
பின் சிறு பூரிகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மூலிகைபூரி ரெடி.
இது சளி, இருமலை போக்கக்கூடியது.
@KitchenOLBN