2022-05-27 15:13:22
சென்னை சடையன் குப்பம் பர்மா நகர் 4,7,14 வது தெருக்களில் பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்டதாக அந்த பகுதி அறப்போர் தன்னார்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் Zone 2 EE G.ராதாகிருஷ்ணன் அவருடைய பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அங்கே போடப்பட்ட புதிய பழைய சாலைகள் அகற்றப்பட்டு மீண்டும் சாலை அமைக்கப்படும் என்று மாநகராட்சி உறுதி அளித்துள்ளது.
பழைய சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைக்க வேண்டாம் என்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்த பிறகும் வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து சாலை பணிகளை செய்ய சொல்லிய இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பொது மக்கள் புகார்களை அலட்சியம் செய்யும் மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பகுதியிலும் பழைய சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்தால் தைரியமாக தடுத்து நிறுத்தி கேள்வி கேளுங்கள். பொது மக்கள் ஒன்று திரண்டுவிட்டால் எந்த அதிகாரியும் சட்டத்தை மீற துணிய மாட்டார்கள்.
ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு துணை நின்று கமிஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க தயங்கும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு சென்னை அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தாருங்கள். #KollaiyaneVeliyeru
Satya Plaza, No.7, 2nd Floor, Dr.Thirumoorthy Nagar Main Rd,
Nungambakkam, Chennai-600034. Ph - 7200020099
176 views12:13