இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுத்தால் சாலைகளில் கொடி மற்றும் பேனர்களை வைப்பதை அரசியல்வாதிகள் நிறுத்துவார்கள்? அதிமுக பேனர் விழுந்து Subashree இறந்த போது அதை வைக்க சொன்னவர் மீது FIR பதிவு செய்ய சொன்ன எதிர்க்கட்சி திமுக தற்பொழுது ஆளுங்கட்சியாக திமுக கொடி கம்பம் வைக்க சொன்னவர் மீது FIR போடுவார்களா?
பள்ளி சிறுவனை வேலைக்கு அமர்த்திய கொடிகள் வைக்கும் contractor மீது வழக்கு பதியப்படுமா?
சட்டத்தை மீறி, மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில், உங்களுக்காக கொடுக்கப்படும் வரவேற்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு கூச்சமாகவே இருக்காதா? 1.5 லட்சம் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
ஆளுங்கட்சி அமைச்சர்களும் MLAக்களும் இப்படி சட்டத்தை மீறி விளம்பரம் செய்தால் சட்டத்தை மீறும் மற்ற அரசியல் கட்சிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? உங்க விளம்பரத்திற்கு எங்க உயிர் தானே வேணுமா?