அனுமதியின்றி ஆபத்தான வகையில் சாலைகளில் பேனர் வைக்கும் விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் சட்டத்தை மீறினால் மற்ற கட்சிகளும் இதை காரணம் காட்டி தவறு செய்ய வாய்ப்பாக அமைந்துவிடும். அதனால் தான் ஆளுங்கட்சியினர் பேனர் வைக்காமல் இருப்பது அவசியம்.
அப்படி பேனர் வைத்தால் அவர்கள் மீது திமுக என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்குமா? அரசியல் தலையீடு இல்லாமல் பேனர் வைக்கும் திமுகவினர் தண்டிக்கப்படுவார்களா?