Get Mystery Box with random crypto!

ஏப்ரல்.29: இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்! “தமிழுக்கு | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஏப்ரல்.29:
இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” எனப் பாடி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கனக சுப்புரத்தினம்.

18 வயதில், காரைக்காலில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் போன்ற பல்வேறு புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார் .

பாரதியார் மீது பற்று கொண்டிருந்த கனகசுப்புரத்தினம், அவரை நேரில் சந்தித்து உரையாடி தனது மானசீக குருவாகவும் ஏற்றுகொண்டார்.

அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

1928-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.

திராவிட மேடைகளில் கவிஞரின் கவிதைகள் முரசென முழுங்கின.

1929ம் ஆண்டு ‘குடியரசு‘ ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதினார்.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெற்றார்.

தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற படைப்புகள் தமிழ்த்தேசிய அரசியலை கூர்மைபடுத்தின.

சென்னை சாந்தோம் சாலையில் ‘முத்தமிழ் மன்றம்’ நிறுவினார்.

1946ம் ஆண்டு அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட ‘புரட்சிக் கவிஞர்’ என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார்.

அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார்.

1954-ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார்.

1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் இயற்கை எய்தினார்.

1982-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.